ஏற்காடு மலைச் சரிவில் காட்டுத் தீ!

சேலம் மாவட்டம், ஏற்காடு பஸ் நிலையம் அருகில் நியூ டவுன் பிளாட் அருகில் உள்ள தரிசு நிலத்தில், இன்று மாலை 4:00 மணியளவில் திடீரென காட்டுத்தீ பற்றியது. சம்பவ இடத்திற்கு வந்த ஏற்காடு தீயணைப்பு துறையினர், மலைச் சரிவு என்பதால் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

-நே.நவீன் குமார்.

Leave a Reply