சென்று கொண்டிருந்த கார் மீது மரம் விழுந்து விபத்து!-ஏற்காடு அருகே இரவு நேரத்தில் நடந்த விபரீதம்.

தர்மபுரி மாவட்டம், பத்மஸ்ரீ நகரை சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 30), இவரது மனைவி அம்மு (வயது 25) இருவருக்கும் ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. இவர்கள் இருவரும் இரு தினங்களுக்கு முன்னர் ஏற்காடு சுற்றுலா வந்துவிட்டு நேற்று இரவு தங்கள் ‘மாருதி சுசுகி ஸ்விஃப்ட்’ காரில், தர்மபுரிக்கு நாகலூர் கிராமம் வழியாக புறப்பட்டனர்.

இவர்கள் காரில் கரடியூர் கிராமம் அருகில் சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் இருந்த ‘இளவம் மரம்’ கார் மீது விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

நே.நவீன் குமார்.

Leave a Reply