திருச்சி அருகே உப்பு ஏற்றி வந்த லாரி தலை குப்புற கவிழ்ந்து விபத்து!

வேதாரண்யத்தில் இருந்து கல்கத்தாவிற்கு உப்பு பாக்கெட்டுகளை ஏற்றிச்சென்ற லோடு லாரி நேற்று இரவு திருவெறும்பூர் அருகே திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வேதாரண்யத்தில் இருந்து கல்கத்தாவிற்கு உப்பு பாக்கெட்டுகளை ஏற்றிக்கொண்டு லோடு லாரி வந்தது. இதனை கள்ளக்குறிச்சியை சேர்ந்த காளியப்பன் மதன் ராஜு (32) என்பவர் ஓட்டி வந்தார்.

அப்படி நேற்று இரவு வந்த லாரி திருச்சி தேசிய நெடுஞ்சாலை திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதிக்கு வந்தபோது மெயின் ரோட்டிற்கும் சர்வீஸ் ரோட்டிற்கும் இடையே இருந்த சென்டர் மீடியனில் தூக்க கலக்கத்தில் ராஜு லாரியை மோதினார்.

இதில் நிலை தடுமாறிய லாரி தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமும் இல்லை. இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டதோடு போக்குவரத்தை சீர் செய்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

-ஆர்.சிராசுதீன்.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply