புது அவதாரம் எடுத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!-சொல்வதற்கு ஒன்றுமில்லை.

ஆட்சிப் பொறுப்பில் எத்தனை நாட்கள்; எத்தனை மாதங்கள்; எத்தனை ஆண்டுகள் இருகின்றோம் என்பது முக்கியமல்ல; தாம் இருக்கும்வரை ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஆட்சியை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் மு.க.ஸ்டாலின் மிக தெளிவாகவே இருக்கிறார்.

அதற்கு இடையூறாக அமைச்சர்கள், அதிகாரிகள், கட்சி, குடும்பம், உறவினர்கள், நண்பர்கள்… இப்படி யார்; எது குறுக்கே வந்தாலும் அதை தூக்கி வீசுவதற்கும் மு.க.ஸ்டாலின் தயங்கமாட்டார்!-என்று, நமது ‘உள்ளாட்சித்தகவல்’ ஊடகத்தில் நேற்று (May 29, 2021 3:18 pm) வெளியிட்டு இருந் ஒரு செய்தியில் நான் குறிப்பிட்டு இருந்தேன். அதை இன்று கோயம்புத்தூர் ESI மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெய்பித்து காட்டிவிட்டார்.

இதைப் பார்க்கும்போது ‘இவன்தான்டா முதலமைச்சர்’ என்று என்னை அறியாமலேயே எனக்கு சொல்ல தோன்றுகிறது.

ஒருமையில் சொன்னதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோபித்து கொள்ளவேண்டாம். என் ஆழ்மனதில் இருந்து எப்போதாவது அபூர்வமாக குறிஞ்சி மலரைப் போல பூக்கும் உண்மையான, உணர்வுப்பூர்வமானப் பாராட்டு இப்படிதான் இருக்கும்.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

இதுத்தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.

http://www.ullatchithagaval.com/2021/05/29/57399/

http://www.ullatchithagaval.com/2021/05/10/56790/

2 Comments

  1. MANIMARAN May 30, 2021 4:58 pm
  2. admin May 30, 2021 9:42 pm

Leave a Reply