மேகதாது அணை விவகாரம்!- இரு மாநில அரசும் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும்!-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கர்நாடக முதலமைச்சர் பி. எஸ். எடியூரப்பா கடிதம்.

கர்நாடக மாநிலத்தின் நீர் தேவையைப் பூர்த்தி செய்யவும், இரு மாநிலத்தின் நீர் தேவையைப் பூர்த்தி செய்யவும் மட்டுமே மேகதாது அணை திட்டம்.

மேகதாது அணை கட்டுவதால் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, இரு மாநிலத்தின் நன்மை மற்றும் விவசாயிகளின் நன்மைக்காகவே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

காவிரியில் தமிழ்நாடு அரசு ( குந்தா மற்றும் சிலஹல்லா) இரண்டு நீர் மின் நிலைய திட்டங்களைக் கொண்டு வருகிறார்கள். இத்திட்டத்திற்காக இதுவரை தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், மேட்டூர் அணைக்குக் கீழ் தமிழ்நாடு சிறு சிறு நீர் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது; ஆனால் இதற்கும் தமிழ்நாடு அரசு இதுவரை கர்நாடக அரசுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.

எனவே, இரண்டு மாநிலங்களின் நலனுக்காகக் கட்டப்படும் மேகதாது அணைக்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்க வேண்டாம்.

என்ன பிரச்சனையாக இருந்தாலும் இரு மாநில அரசும் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும்; அதற்காக இரு மாநில அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

இவ்வாறு கர்நாடக முதலமைச்சர் பி. எஸ். எடியூரப்பா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply