பேராசிரியர்கள் அனைவரும் ஆகஸ்ட் 9 முதல் அனைத்து வேலை நாட்களிலும் பணிக்கு வர வேண்டும்!-தமிழ்நாடு உயர்கல்வித்துறை உத்தரவு.

தமிழ்நாட்டில் கலை அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள் துவங்க உள்ளதால், அன்று முதல் பேராசிரியர்கள் அனைவரும் பணிக்கு வர தமிழ்நாடு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

2021-2022-ம் கல்வியாண்டில் கலை அறிவியல் மற்றும் பொறியியல் முதல் ஆண்டு மாணவர்களைத் தவிர; மற்ற மாணவர்களுக்கு இம்மாதம் ஆகஸ்ட் 9 -ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் துவங்கப்படுகின்றன.

ஆகையால், அனைத்து அரசு மற்றும் தனியார் கலை கல்லூரிகள், பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகள் கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி பேராசிரியர்கள் அனைவரும் அனைத்து வேலை நாட்களிலும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என, உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் Dr.D. கார்த்திகேயன் உத்தவிட்டுள்ளார்.

-Dr.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply