திருச்சி அருகே காவிரி ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு!-திருவெறும்பூர் போலீசார் விசாரணை.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட, திருச்சி -கல்லணை சாலை கீழமுல்லக்குடி கிராமம் அருகே காவிரி ஆற்றில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஒரு ஆண் சடலம் கிடப்பதாக, இன்று (02.09.2021) திருவெறும்பூர் காவல்துறையினருக்கு வந்த தகவலை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் போலீசார், இன்று (02.09.2021) காலை 9 மணியளவில் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

இதுபோன்ற முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை “கிளிக்” செய்யவும்.

http://www.ullatchithagaval.com/2021/08/04/60080/

Leave a Reply