காவிரி ஆற்றில் குதித்த இளைஞர் மாயம்!- திருச்சி ஓயாமரி சுடுகாடு அருகே நடந்த விபரீதம்.

ஸ்ரீராம்

திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட, வரகநேரி, ஆனந்தபுரம் மேட்டு தெருவை சேர்ந்தவர் நாகமாணிக்கம் மஞ்சுளா தம்பதி, இவர்களது மகன் ஸ்ரீராம் (வயது 16), இவர் நண்பர்களுடன் சேர்ந்து இன்று (19.09.2021) மாலை காவிரி ஆற்றிற்கு குளிக்க சென்றுள்ளார்.

இந்நிலையில், இன்று (19.09.2021) மாலை 5:30 மணியளவில் திருச்சி ஓயாமரி சுடுகாடு அருகே உள்ள படித்துறையில், காவிரி ஆற்றில் குதித்து குளித்து விளையாடி கொண்டிருந்த போது; எதிர்பாராத விதமாக சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கி மாயமாகியுள்ளார்.

இத்தகவல் அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

தற்போது இரவு நேரம் ஆகிவிட்டதாலும், காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதாலும், தேடுதல் பணி தடைப்ட்டுள்ளது.

இது சம்பந்தமாக திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.

தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் மற்றும் நீச்சல் தெரிந்த உள்ளுர் நபர்கள் தேடுதல் பணியில் ஈடுப்பட்டால் மட்டுமே ஸ்ரீராமின் சடலத்தை மீட்க முடியும்.

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply