13 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொந்தரவு கொடுத்த 22 வயது இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

சென்னை, அம்பத்தூர், நசரத்பேட்டை பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமியிடம், அதே பகுதியில் வசிக்கும் விஜயகுமார் (வயது 22) என்பவர், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, 9 ½ சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ. 90 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டு, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, அச்சிறுமியின் தாயார் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில், பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டு, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விஜயகுமார் (வயது 22) என்பவரை போக்சோ சட்டத்தில் (Crime No : 26/2021) கைது செய்தனர்.

அவரிடமிருந்து 9 ½ சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ. 60,000/- பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டது. மேலும், அவர் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply