தேர்தல் விரோதம்!-பா.ஜ.க நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய திருநெல்வேலி திமுக எம்.பி. ஞானதிரவியம் மற்றும் அவரது மகன்கள் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு!-முதல் தகவல் அறிக்கையின் உண்மை நகல்.

திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் S.ஞானதிரவியம்.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் ஒன்றியம், 12-வது வார்டு பா.ஜ.க நிர்வாகி ஆவரைகுளம் பாஸ்கரன்.

தேர்தல் விரோதம் காரணமாக வள்ளியூர் ஒன்றியம், 12- வது வார்டு பா.ஜ.க நிர்வாகி ஆவரைகுளம் பாஸ்கரன் என்பவர் மீது தாக்குதல் நடத்திய, திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் S.ஞானதிரவியம் மற்றும் அவரது மகன்கள் உள்பட 4 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code) 147, 294b, 323, 506(2) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் பணங்குடி காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

முதல் தகவல் அறிக்கையின் உண்மை நகல். நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு நாம் பதிவு செய்துள்ளோம்.

FIR-452-PANAGUDIN-PS-IN-NELLAI

திமுக பிரமுகர்கள் மற்றும் திமுக மக்கள் பிரதிநிதிகள் சிலரின் சட்ட விரோத தொடர் நடவடிக்கைகளால், ஆட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் தற்போது களங்கம் ஏற்பட்டு வருகிறது. இதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயவு தாட்சணியம் பார்க்காமல் முலையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply