”யுடிஎல் மீடியா-UTL MEDIA” செய்தி எதிரொலி!-திருச்சி அருகே கல்லணை சாலையில் பிரதான குடிநீர் குழாயில் பல நாட்களாக ஏற்பட்டு இருந்த நீர் கசிவு முழுமையாக சரிசெய்யப்பட்டது.

திருச்சி – கல்லணை சாலையில், சர்க்கார்பாளையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் கிழக்கே காந்திபுரம் கிராமம் அருகே பிரதான குடிநீர் குழாயில் பல நாட்களாக நீர் கசிவு ஏற்பட்டு இருந்தது. ஆனால், இன்று வரை அது சரி செய்யப்படவில்லை; அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு காரணம் என்று, நமது ”யுடிஎல் மீடியா (UTL MEDIA)”- வில் நேற்று (Oct 18, 2021) முற்பகல் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு இருந்தோம்.

மேலும், இதுக்குறித்து தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் உயர் அதிகாரிகள் உள்பட, தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகத்திற்கும் எழுத்துப்பூர்வமாக வீடியோ பதிவை “யுடிஎல் மீடியா (UTL MEDIA)” சார்பில் அனுப்பி வைத்து இருந்தோம்.

இந்நிலையில், நேற்று (Oct 18, 2021) மாலை பிரதான குடிநீர் குழாயில் பல நாட்களாக ஏற்பட்டு இருந்த நீர் கசிவு முழுமையாக சரிசெய்யப்பட்டது.

குடிநீர் குழாயில் ஏற்பட்ட நீர் கசிவை சரிசெய்வதற்கு கூட; தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகத்தைதான் நாட வேண்டியுள்ளது. அப்படியானால், சம்மந்தப்பட்ட துறைச் சார்ந்த அதிகாரிகளும் மற்றும் பணியாளர்களும், குறிப்பாக மாவட்ட அரசு நிர்வாகமும் எதற்கு இருக்கிறது?!என்ன செய்துக்கொண்டு இருக்கிறது?!

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply