கன்னியாகுமரி மாவட்டம்,அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தலைவராக இருப்பவர் அழகேசன். சமீபத்தில் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்துள்ளார்.
இவர் மீது திமுக கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லாதீர்மானம் நேற்று (28.10.2021) கொண்டுவர முயன்றனர்.
கூட்டம் தொடங்கியதும் துணைதலைவர் சண்முகவடிவு, திமுக ஒன்றிய உறுப்பினர்கள் ராஜேஷ்,ஆரோக்கியசவுமியா ஆகிய மூன்று பேரும் ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன் மீது நம்பிக்கை இல்லை என்று வெளிநடப்பு செய்வதாக அறிவித்தபடி கூட்டத்தில் இருந்து வெளியே சென்றனர்.
இதனையடுத்து உடனடியாக கூட்ட அரங்கின் வாயில் கதவை மூடிவிட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தலைவர் அறிவித்தார்.
இதனை சற்றும் எதிர்பாராத துணைத்தலைவர் சண்முகவடிவு மற்றும் திமுக ஒன்றிய உறுப்பினர்கள் ராஜேஷ் ஆரோக்கியசவுமியா ஆகியோர் தலைவர் தங்களை மதிப்பதில்லை என்றும் தங்களது வார்கடுகளுக்கு எந்த பணியும் செய்யவில்லை எனக்கூறி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுபடியாகாது என உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-ராஜா