கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், இலாலாபேட்டையில் வசித்து வரும் நாகராஜ் என்பவர் தொடர்ந்து பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறார்.
அந்த வகையில் இன்று (02.11.2021) புனவாசிப்பட்டி அரசினர் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு பாட நோட்டுகள் மற்றும் முக கவசங்களை இலவசமாக வழங்கினார். சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் இதுவரை 8 படங்கள் வரை நடித்துள்ள இவர் ஒரு மாற்றுதிறனாளி என்பது இங்கு குறிப்பிடதக்கது.
–சி.கார்த்திகேயன்