அரசு பேருந்து ஓட்டுனர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய நபர் கைது!- 5 பிரிவுகளில் வழக்கு பதிவு!-முதல் தகவல் அறிக்கையின் உண்மை நகல்.

ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். நவம்பர் 22, 2021 அன்று TN 63 N 1802 என்ற அரசு பேருந்தில் ராமேஸ்வரத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு மதுரை ஆரப்பாளையம் வந்து திருப்பூர் நோக்கி பேருந்தை இயக்கி வந்தார்.

இந்நிலையில் மதுரை – தேனி சாலையில் பெல் ஹோட்டல் அருகே இன்னோவா TN 01 BH 6166 காரில் வந்த நபர், பேருந்தை முந்துவதற்கு முயற்சி செய்தார்.

அது போக்குவரத்து நெரிசலான பகுதி என்பதால் சற்று மெதுவாக வரும்படி அரசு பேருந்து ஓட்டுனர் முத்துக்கிருஷ்ணன் சைகை செய்தார்.

அதை பொருட்படுத்தாத இன்னோவா கார் ஓட்டுனர் பேருந்தை முந்தி சென்று, அரசு பேருந்து முன்பு காரை திடீரென்று பிரேக் அடித்து நிறுத்தி, பேருந்து ஓட்டுனர் முத்துகிருஷ்ணன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினார்.

இதில் ஓட்டுனர் முத்துகிருஷ்ணன் கையில் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் அரசு பேருந்து ஓட்டுனர் முத்துகிருஷ்ணன் மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் கார் டிரைவர் மீது எழுத்துப் பூர்வமாக புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் இன்னோவா கார் டிரைவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு (CRIME NO: 1101/2021) செய்து கார் டிரைவரை காவல்துறை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கார் டிரைவரின் பெயர் சுரேஷ் வயது 36, இவர் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், முடிகண்டம் பகுதியை சேர்ந்தவர் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

FIR-NO-1101-SS-COLNY-PS1-converted

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply