திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!-தமிழ்நாடு முழுவதும் காவல்துறை பலத்த பாதுகாப்பு!

நிறைவேற்ற முடியாத பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து; திமுகவினர் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றி விட்டதாகவும், மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வலியுறுத்தியும், தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் திருச்சி மாவட்ட அதிமுகவினர் சார்பில், திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிரில் திமுக அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

அதிமுகவினரின் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு, போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் எந்த இடையூறும் ஏற்படாதவாறு, தமிழ்நாடு முழுவதும் இன்று (17.12.2021) காலையில் இருந்தே காவல் துறையின் சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

-கே.பி.சுகுமார்
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply