தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் 34 ஆவது பட்டமளிப்பு விழா தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி தலைமையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் எழிலன், கணபதி, அரவிந்த் ரமேஷ் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் மருத்துவர் சுதா சேஷய்யன் மற்றும் பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
-கே.பி.சுகுமார்., B.E.,
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com