தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

டிசம்பர் 30 ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சிக்கு வருகை தர உள்ளார். அப்போது, பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைப்பதோடு, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.

இதற்கான விழா திருச்சி பஞ்சப்பூரில் நடத்த முதலில் திட்டமிட்டிருந்தனர். ஆனால், கடந்த ஒரு மாத காலமாக பெய்த கனமழையின் காரணமாக, அப்பகுதி மண் உறுதித்தன்மை திருப்திகரமாக இல்லாத காரணத்தால், கேர் கல்லூரி வளாகத்தில் விழாவை நடத்துவதற்கு அதற்கான பூர்வாங்க பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வந்து செல்லும் வழித்தடங்களை ஆய்வு செய்யும் பணியில் காவல்துறை உயரதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் இன்று (22.12.2021) மாலை 6 மணியளவில் திருச்சி – திண்டுக்கல் சாலையை காவல்துறை அதிகாரிகள் குழு நேரில் பார்வையிட்டது.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply