திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 18-வது வார்டு, ஜின்னா தெருவில் வசிக்கும் சையது இப்ராகிம் பாதுஷா என்பவரின் மகன் அப்துல் ரகுமான், இவர் 11ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளி விடுமுறையில் வீட்டில் இருந்து வந்த இவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து திருச்சி கம்பரசம்பேட்டை அருகே காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கு நேற்று குளிக்க சென்றுள்ளார்.
நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக குளித்துக்கொண்டிருந்த அப்துல் ரகுமான் எதிர்பாராதவிதமாக காவிரி ஆற்றில் மூழ்கி மாயமானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் ஆற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனால், நேற்று இரவு வரை தேடியும் அப்துல் ரகுமான் உடலை கண்டுப்பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், இன்று காலை முதல் மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்த தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் அப்துல் ரஹ்மான் சடலத்தை தேடி கண்டுபிடித்து இன்று மீட்டனர். அதன்பின்பு அப்துல் ரகுமானின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பெற்றோர்களின் அன்பானக் கவனத்திற்கு:
பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை நாட்களில் உங்கள் குழந்தைகள் எங்கு செல்கிறார்கள்; யாருடன் செல்கிறார்கள்?! என்பதை முழுமையாக கண்டறியுங்கள். அவர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணியுங்கள்..!-ஏனென்றால், 16 to 26 ஆபத்தான வயது!-இளம் கன்று பயம் அறியாது. எனவே, நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com
மிகுந்த வேதனை அளிக்கிறது,
இளைஞர்கள் இது போன்று ஆற்றில் குளிப்பதை தவிர்க்க…..