தேசிய இளைஞர் தின கொண்டாட்ட முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் புதுச்சேரி வருகிறார்.

மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், புதுச்சேரியில் நடைபெற உள்ள தேசிய இளைஞர் தின விழா கொண்டாட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக வருகை தருகிறார். 

இன்றிரவு சென்னை வரும் அமைச்சர் நாளை பகல் 12.30 மணி அளவில் புதுச்சேரியில், தேசிய நாட்டு நலப் பணி மற்றும் நேரு யுவ கேந்திராவைச் சேர்ந்தவர்களைச் சந்திக்கிறார். 

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12ம் தேதி தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருவதையொட்டி, புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில், நடைபெற உள்ள இந்த ஆண்டின்  தேசிய இளைஞர் தின விழாவின் முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொள்கிறார். உள்ளூர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுடன்  சேர்ந்து 2022 தேசிய இளைஞர் தின விழாவுக்கான இலச்சினையை வெளியிடுகிறார். 

பின்னர், மாலையில், சென்னை திரும்பும் அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் ஆறாம் தேதி காலையில், விமானம் மூலம் தில்லி புறப்படுகிறார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply