காரை உடைத்து விபத்துக்குள்ளானவர்களை காப்பாற்றிய கிராம மக்கள்!

சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பழனி மலை முருகனை தரிசித்து விட்டு குழந்தைகளுக்கு மொட்டையடித்து வேண்டுதலை நிறைவேற்றி விட்டு சென்னையை நோக்கி காரில் இன்று (29.01.2022) திரும்பிக்கொண்டிருந்தனர். அவர்கள் பயணம் செய்த கார் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறை அருகே உள்ள புதூர் குறிஞ்சி பொறியியல் கல்லூரி அருகே இன்று மதியம் 1 மணி அளவில் அதிவேகமாக வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் ஒன்று சாலையின் குறுக்கே புகுந்ததால் கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலை நடுவே இருந்த தடுப்பு கம்பியில் மோதி நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான காரின் கதவை உடைத்து பெண்களையும் குழந்தைகளையும் அருகில் இருந்த கிராம மக்கள் காப்பாற்றினார்கள்.

இதில் இரு பெண்கள், 2 குழந்தைகள் மற்றும் கார் ஓட்டுநர் ரவிக்குமார் என்பவர் உள்பட மொத்தம் ஐந்து பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply