திண்டுக்கல் மாநகராட்சியில் வேட்பு மனு தாக்கல் செய்த முதல் வேட்பாளர்!

சுயேட்சை வேட்பாளர் தமிழ்வாணன்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் தற்பொழுது தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. 28.01.2022 முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளது. இந்த 48 வார்டுகளில் போட்டியிட 28.01.2022 யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில், நேற்று (29.01.2022) மாலை 14 வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட தமிழ்வாணன் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்ய மாநகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார். பின்னர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திண்டுக்கல் மாநகராட்சியில் இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் சுயேட்சையாக போட்டியிட ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டோம்னிக்

Leave a Reply