காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு!

‘அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் இணைய அழைப்பு விடுத்து, திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை, திமுக பொருளாளரும் நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடம் ஒப்படைத்தார்’

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும் நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து, அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் இணைய அழைப்பு விடுத்து, திராவிட முன்னேற்றக் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதிய கடிதத்தை ஒப்படைத்தார். உடனடியாக, சோனியா காந்தி , அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பிற்கு காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக வீரப்ப மொய்லியை நியமித்து, திமுக தலைவர்க்குப் பதில் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இச்சந்திப்பின்போது, ராகுல் காந்தியும் உடனிருந்தார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply