திருச்சி மாந்துறை அருகே 80 சவரன் தங்க நகைகள், ரூ.12 லட்சம் பணம் கொள்ளை!-லால்குடி போலீசார் விசாரணை.

கொள்ளை நடந்த வீடு.

திருச்சி மாவட்டம், லால்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாந்துறை, நெருஞ்சலங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கமலா க/பெ. ஏகாம்பரம். கடந்த 14/02/2022 அன்று கமலா தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். இந்நிலையில், சுமார் 20 நாட்களுக்குப் பிறகு இன்று (04/03/2022) காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் கொள்ளை நடந்து இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கமலா, உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த லால்குடி போலீசார், கைரேகை நிபுணர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து விரிவான தகவலை தெரிந்து கொள்வதற்காக, லால்குடி காவல் நிலைய ஆய்வாளரை இன்று (04/03/2022) காலை 10:37 மணிக்கு நாம் தொடர்பு கொண்டோம்.

வீட்டின் உரிமையாளர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று 20 நாட்கள் ஆகிறது. இதற்கிடையில் எப்போது இந்த கொள்ளை சம்பவம் நடந்தது என்று தெரியவில்லை. இன்று காலை தான் வீட்டின் உரிமையாளர் வீடு திரும்பியுள்ளார். அதன் பிறகு தான் எங்களுக்கு தகவல் கிடைத்தது. இந்த கொள்ளை சம்பவத்தில் 80 சவரன் தங்க நகைகளும், ரூபாய் 12 லட்சம் ரொக்கப் பணமும் பறிபோய் விட்டதாக வீட்டின் உரிமையாளர் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார்.

இவ்வாறு லால்குடி காவல் நிலைய ஆய்வாளர் நம்மிடம் தெரிவித்தார்.

வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்லும்போது யாராவது உறவினர் ஒருவரை வீட்டில் தங்க வைத்திருக்கலாம் அல்லது காவல் நிலையத்திலாவது தகவல் தெரிவித்து சென்று இருக்கலாம். இப்படி எதுவும் செய்யாமல் சென்றது கொள்ளையர்களுக்கு சாதகமாக அமைந்து விட்டது.

வீட்டின் உரிமையாளர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று இருப்பதை நன்கு தெரிந்த / இதை நோட்டமிட்ட உள்ளுர் நபர்கள்தான் இந்த கொள்ளை சம்பவத்திற்கு ஏதாவது ஒரு வகையில் நிச்சயம் உடந்தையாக இருந்திருக்க கூடும்.

உள்ளவன் உடந்தையாக இல்லாமல் ஊர் அழியுமா என்ன?!

-Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply