தலையில் கல்லை தூக்கிப் போட்டு ஒருவர் படுகொலை!-உடலையும், மோட்டார் பைக்கையும் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மர்ம நபர்கள்!-போலிசார் விசாரணை.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரம் காவல் உட்கோட்டம், ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திண்டுக்கல் – பழனி தேசிய நெடுஞ்சாலை, அக்கரைபட்டியில் எஸ் எஸ் எம் பொறியியல் கல்லூரி அருகே உள்ள மோட்டார் ரூம் பின்பக்கம் அடையாளம் தெரியாத ஒரு நபரின் தலையில் கல்லைப்போட்டு படுகொலை செய்து, இருசக்கர வாகனத்துடன் சேர்த்து மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். உடல் பாதி எரிந்த நிலையில் உள்ளது, இருசக்கர வாகனம் முற்றிலுமாக எரிந்துள்ளது.

தகவல் அறிந்து இன்று (18/03/2022) சம்பவ இடத்திற்கு வந்த ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய போலிசார், இதுக்குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

இதுப்போன்ற முந்தையச் செய்திகளுக்கு, கீழ்காணும் இணைப்பை “கிளிக்” செய்யவும்.

http://www.ullatchithagaval.com/2022/03/13/69687/

Leave a Reply