அண்ணல் அம்பேத்கருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புகழ் வணக்கம் செலுத்தினார்!

சட்ட மாமேதை பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ இன்று ( 14.04.2022) காலை சென்னை கோயம்பேட்டில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அவர்களது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்.

கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்டச் செயலாளர்கள் வடசென்னை கிழக்கு சு.ஜீவன், வடசென்னை மேற்கு டி.சி.இராஜேந்திரன், தென்சென்னை கிழக்கு கே.கழககுமார், தென்சென்னை மேற்கு சைதை ப.சுப்பிரமணி, செங்கல்பட்டு வடக்கு மா.வை.மகேந்திரன், சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புகாரி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு புகழ் வணக்கம் செலுத்தினர்.

கே.பி.சுகுமார்

Leave a Reply