தமிழ்நாடு முதலமைச்சரின் முதலெழுத்து ஸ”வை நீக்கி அதற்கு மாற்று எழுத்தைக் கண்டுபிடிக்கத் தமிழக அரசு உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும்!-பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை.

பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தமிழன்னை எனப் பகிர்ந்திருக்கும் ஓவியத்தில் பின்னணியில் தமிழ் எழுத்துக்களோடு ‘ஸ’ என்கிற சம்ஸ்கிருத எழுத்தும் இடம்பெற்றிருந்தது.

“எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் #தமிழணங்கே” என்று எழுத்தோடு தமிழ்த்தாயின் ஓவியம் ஒன்றை பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அதற்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும்போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டிவிட்டது. இதைத்தான் ‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்’என வள்ளுவர் அடையாளம் காட்டிப் போனார்.” என விமர்சித்து இருந்தார்.

தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு பதிலளித்த பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை : “தமிழ் தமிழ்” என்று முழக்கமிடும் தமிழ்நாடு முதலமைச்சரின் பெயரில் உள்ள முதல் எழுத்தை வைத்தமைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக உள்ளது!

தமிழ்நாடு முதலமைச்சரின் பெயரில் உள்ள முதல் எழுத்து “ஸ”வை நீக்கி அதற்கு மாற்று எழுத்தைக் கண்டுபிடிக்கத் தமிழ்நாடு அரசு உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும்.

அதுவரை ஸ்டாலின் என்ற பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் மக்களுக்கு அறிவுரைக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை பணிவன்புடன் கேட்டுக் கொண்டார்!

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply