வழக்கறிஞர்கள் வீட்டில் கைவரிசையை காட்டிய கொள்ளையர்கள்!- திண்டுக்கல்லில் பரபரப்பு.

திண்டுக்கல் MVM நகர் ராமசாமி காலனி 7வது தெருவில் வழக்கறிஞர் ஆரோக்கிய அருள் தாஸ். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்றுள்ளார். வீடு பூட்டியதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் நேற்று நள்ளிரவு வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த 10 சவரன் நகையை கொள்ளை அடித்தனர்.

மேலும், வீட்டில் என்னென்ன திருடு போனது என வீட்டின் உரிமையாளர் ஆரோக்கிய அருள் தாஸ் வந்த பின்பு தான் வீட்டில் வேறு எந்த பொருளும் தொலைந்து உள்ளதா என தெரியும். சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும்,அருகில் உள்ள MVM நகர் 7வது குறுக்குத் தெருவில் வசிப்பவர் ராஜகோபால். இவர் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் பெங்களூரில் வசிக்கும் தனது மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை அடித்துள்ளனர்.

அதேபோல் MVM நகர் 4வது குறுக்குத் தெருவில் வசித்து வரும் வழக்கறிஞர் லீனஸ் என்பவர் அமெரிக்காவில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதை அறிந்த திருடர்கள் வீட்டை உடைத்து கொள்ளை முயற்சி செய்துள்ளனர். லீனஸ் தனது வீட்டில் சிசிடிவி கேமரா மற்றும் சுற்றுப்புறச் சுவர்களில் அலாரம் பொருத்தியுள்ளார்.

இதனை அறியாத கொள்ளையர்கள் வீட்டிற்குள் நுழைய அதன் சிக்னல் அமெரிக்காவிலுள்ள வீனஸ்க்கு தெரியவந்தது உடனே அவர் அலாரம் அடிக்க செய்து கொள்ளையர்களை எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் அங்கிருந்த கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

MVM நகரில் திருடு போனது குறித்து திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது,

மேலும், தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்துள்ளனர். ஒரே நாளில் இரண்டு வீடுகளில் பணம் நகை திருடு மற்றும் ஒரு வீட்டில் திருட முயற்சி செய்த சம்பவங்கள் திண்டுக்கல் மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டி.எஸ்.ஆர்
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply