இலங்கை தமிழர்களுக்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் ரூ 10,000 நிவாரண நிதி வழங்கிய யாசகர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறை சேர்ந்தவர்  யாசகர் பூல்பாண்டி இவர் பொதுமக்களிடம்  யாசகம் பெற்று தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார். இவர் இலங்கை வாழ்  தமிழர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதனை அறிந்த யாசகர் பூல்பாண்டி திண்டுக்கல் பொதுமக்களிடம் பெற்ற யாசக தொகையான ரூபாய் 10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து மாவட்ட ஆட்சியர் விசாகனை நேரில் சந்தித்து தான் யாசகமாக பெற்ற பத்தாயிரம் ரூபாயை  இலங்கைத் தமிழர் நிவாரண நிதியாக வழங்கினார்.

மேலும், இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கைத் தமிழர் நிவாரண நிதியாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ரூபாய் 50,000 வழங்கினார். இதேபோல் கொரோனா காலத்திலும் பொது மக்களிடம் யாசகம் பெற்று தமிழக அரசுக்கு நிவாரண நிதி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டி.எஸ்.ஆர்
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply