தமிழகத்தில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படமாட்டாது என்று மாநில போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படமாட்டாது என்று மாநில போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் 500 மின்சாரப் பேருந்துகள் விரைவில் இயக்கப்படவுள்ளதாக அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கூறினார்.

அவற்றின் சேவையைப் பொறுத்து, தமிழகம் முழுவதும் இதனை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். மின் வாகனங்களுக்கான கட்டமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இருசக்கர மின்சார வாகனங்களின் விபத்து குறித்து மத்திய அரசு வெளியிடும் கொள்கை முடிவுகளைப் பொறுத்தே மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று சிவசங்கர் தெரிவித்தார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply