அம்மா வயதுடைய மீனவ பெண்ணை; கூட்டு பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த காம வெறிபிடித்த கயவர்கள்..!

காம வெறிப்பிடித்த காட்டு மிராண்டிகள்..!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட சந்திரா (வயது 45)

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் ஊராட்சி, வடகாடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பாலு. இவரது மனைவி சந்திரா (வயது 45). இவர் நேற்று (24/05/2022) காலை வடகாடு கடல் பகுதியில் கடற்பாசி சேகரிக்க சென்றவர் மாலை வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் அச்சம் அடைந்த சந்திராவின் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் வடகாடு கடலோரப் பகுதிகளில் அவரை இரவு வரை தேடினர். சந்திரா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதனால் து குறித்து சந்திராவின் கணவர் பாலு, ராமேசுவரம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வடகாடு பகுதிக்கு வந்த போலிசார் மாயமான சந்திராவை வடகாடு கடற்கரையை ஒட்டியுள்ள காட்டு பகுதியில் உள்ளுர் மக்களின் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த முள் புதருக்குள் உடல் அரைக்குறையாக எரிந்த நிலையில் அரை நிர்வாணமாக சந்திரா பிணமாக கிடந்துள்ளார். அவரது முகம் மட்டும் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்திருந்தது. கழுத்தில் துணியால் இறுக்கியதற்கான தடயங்கள் இருந்தன. இதனால் அவரை யாரோ மர்ம நபர்கள் கழுத்தை நெரித்து கொன்று விட்டு உடலை தீ வைத்து எரித்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் இறால் பண்ணையில் வேலை செய்யும் வடமாநில வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனால் போலீசாருடன் சென்ற ஊர் மக்கள்; ஆத்திரம் அடைந்து இறால் பண்ணையை அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தினர். மேலும் இறால் பண்ணையில் பணிபுரிந்த 6 வடமாநில வாலிபர்களையும் பொதுமக்கள் சரமாரியாக தாக்கி, அவர்களை ஒரு அறையில் வைத்து பூட்டினர்.

அந்த 6 வாலிபர்களையும் போலீசார் மீட்டு விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். சந்திராவின் உடலை கைப்பற்றி பிரே பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முயன்றனர்.

அப்போது அங்கு திரண்டிருந்த ஊர் மக்கள் சந்திராவின் படுகொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உடலை எடுக்க விட மாட்டோம் என்று கூறி போலீசாரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

இதையடுத்து பொதுமக்கள் சந்திராவின் உடலை எடுக்க அனுமதித்தனர். சந்திராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் வடமாநில வாலிபர்கள் 6 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.. அப்போது அந்த வாலிபர்களில் 3 பேர் சந்திராவை கூட்டு பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு உடலை தீவைத்து எரித்தது தெரியவந்தது.

கடல் பாசி சேகரிப்பதற்காக சென்ற சந்திராவை, அங்கு இறால் பண்ணையில் வேலை பார்த்த வடமாநில வாலிபர்கள் 3 பேர் கஞ்சா போதையில் வழிமறித்து தகராறு செய்திருக்கின்றனர்.

பின்பு அவரை வடகாடு காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று 3 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். அதன்பிறகு சந்திராவை அங்கு வைத்து அவரது சேலையாலேயே கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கின்றனர்.

சந்திராவை அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக முட்புதரில் அவரது உடலை போட்டு முகம் மற்றும் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்திருக்கின்றனர். இதையடுத்து வடமாநில வாலிபர்கள் 3 பேரும் தாங்கள் பணிபுரிந்த இறால் கம்பெனிக்கு சென்று விட்டனர்.

காம வெறிப்பிடித்த காட்டு மிராண்டிகள்..!

இந்நிலையில் மாயமான சந்திராவை தேடியபோது அவர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டு கிடந்தது கண்டறியப்பட்டது. பொதுமக்கள் தாக்கியதில் வடமாநில வாலிபர்கள் 6 பேரும் காயமடைந்தனர். இதனால் அவர்களை ராமேசுவரம் அரசு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு மேல் சிகிச்சைக்காக வாலிபர்கள் 6 பேரும் மதுரைக்கு அழைத்து செல்லப்பட்டனர். வடமாநில வாலிபர்கள் 6 பேரும் சிகிச்சையில் இருப்பதால் அவர்களிடம் போலீசார் முழுமையாக விசாரணை நடத்த முடியவில்லை.

இதனால் சந்திராவை கூட்டு பலாத்காரம் செய்து கொன்ற 3 வாலிபர்கள் யார்? என்பது உறுதி செய்யப்படாமல் உள்ளது. வாலிபர்கள் 6 பேரும் இந்த கொடூர செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

இதனால் சிகிச்சை முடிந்ததும் 6 பேரிடமும் விசாரணையை தீவிரப்படுத்த போலீசார் முடிவெடுத்துள்ளனர். அவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில் போலீஸ் கண்காணிப்பில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் சந்திரா படுகொலையை கண்டித்து வடகாடு மீனவ கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ராமேசுவரம்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (25/05/2022) மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள், மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.

சந்திராவை கூட்டு பலாத்காரம் செய்து கொன்ற கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், கொலை செய்யப்பட்ட சந்திரா குடும்பத்திற்கு ரூ.1 கோடி நஷ்டஈட வழங்க வேண்டும், வடமாநில வாலிபர்கள் வேலை பார்த்த இறால் பண்ணையை மூட வேண்டும், அதன் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

பொதுமக்களின் இந்த போராட்டத்தால் ராமேசுவரம்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து ராமேசுவரம் துணை தாசில்தார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சம்பவ இடத்திற்கு கலெக்டர் வரவேண்டும் மற்றும் தங்களின் கோரிக்கை அனைத்தையும் நிறைவேற்றுவதாக அரசு உத்தரவாதம் தர வேண்டும் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ராமேசுவரத்தில் பரபரப்பும், பதட்டமும் நிலவிது.

மேற்படி இந்த விரிவான தகவல்களை பெறுவதற்காக தங்கச்சிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடு குக்கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் முக்கிய நபர்களிடம் நமது “UTL MEDIA TEAM” இன்று (25/05/2022) இரவு 9 மணி வரை விரிவான விசாரணை மேற்கொண்டதில், இது நாள் வரை இப்பகுதியில் இதுபோன்ற சம்பவம் நடந்ததே இல்லை என்றும், இந்தக் கொடூரமான சம்பவம் இப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் நம்மிடம் தெரிவித்தனர்.

இனி எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டுமென்றால், அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பணி நிமித்தமாகவும், படிப்பு சம்மந்தமாகவும் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்து தங்கியுள்ள நபர்களை, உள்ளூர் நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறையினரின் உதவியுடன் அடையாளம் கண்டு; அவர்களின் பூர்வீகம் குறித்த தகவல்களை உறுதிப்படுத்தி அவற்றை ஆவணப்படுத்த வேண்டும்.

மேலும், வெளியூர் மற்றும் வெளி மாநில நபர்களை பணிக்கு சேர்க்கும் நிறுவனங்கள் மற்றும் கம்பெனி முதலாளிகள், பணியில் சேரும் நபர்களின் பூர்விகம் மற்றும் அவர்களின் குற்றப் பின்னணி குறித்து விரிவான விசாரணைக்கு உட்படுத்தி; அவர்கள் நேர்மையானவர்கள் தான் என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.

இந்த விஷயத்தில் காவல்துறை எந்த சமரசமும் செய்து கொள்ளக்கூடாது.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply