உலக சாதனை படைத்த ராணிப்பேட்டை மாவட்டம்!

ராணிப்பேட்டை மாவட்டதில் மே 27-ம் தேதி 6 நகராட்சி, 8 பேரூராட்சி, 288 கிராம ஊராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அரசு துறையை சார்ந்த பணியாளர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் என அனைவரும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உடன் இணைந்து பிளாஸ்டிக் நெகிழி கழிவுகள் இல்லாத மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற புதிய சாதனை முயற்சியானது மேற்கொள்ளப்பட்டது.

அதில் உலக அளவில் முதன்முறையாக 3 மணி நேரத்தில் 2500 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலிருந்து 186.914 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி எலைட் உலக சாதனை, ஏசியன் ரெக்கார்ட்ஸ், இந்தியா ரெக்கார்ட்ஸ், தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என நான்கு சாதனையில் இடம் பிடித்துள்ளது ராணிப்பேட்டை மாவட்டம். ஏற்கனவே ஸ்விட்ஸ்ர்லாந்து நாட்டில் மூன்று மணி நேரத்தில் 128 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்ததே உலக சாதனையாக இருந்த நிலையில் அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

எஸ்.திவ்யா

Leave a Reply