தமிழ்நாட்டின் கடலூரில் நீரில் மூழ்கி சிறுமிகள் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிரதமர் நரேந்திர மோதி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;
“தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில், ஏழு சிறுமிகள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த செய்தியறிந்து நான் வேதனையடைந்தேன். இந்தத் துயர் மிகுந்த வேளையில், உறவினர்களை இழந்த குடும்பத்தினர் பற்றி எனது மனம் சிந்திக்கிறது.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோதி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
–எம்.பிரபாகரன்