திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதரை தரிசித்த மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்!

மத்திய பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று வழிபாடு செய்தார்.

பின்னர் அங்குள்ள கோசாலையில் கால்நடை பராமரிப்பு குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.முன்னதாக, நேற்று மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் சாலை மற்றும் ரயில்வே திட்டங்கள் மூலம் அடிப்படை கட்டமைப்புகளை மத்திய அரசு மேம்படுத்தி வருவதாக கூறினார்.

புதிய கல்விக்கொள்கை வலிமையான இந்தியாவை உருவாக்க வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.விவசாயிகளுக்கான மானியம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்குக்கே செலுத்தப்படுவதாகவும் அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply