செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டம் சம்பந்தமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

வரும் ஜூன் 23-ம் தேதியன்று நடைபெறவுள்ள அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், 23.6.2022 அன்று நடைபெற உள்ள கட்சியின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்தும், என்னென்ன தீர்மானங்களைக் கொண்டு வரலாம் என்பது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே.பி.சுகுமார்

Leave a Reply