சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தலைமைச்செயலாளர் இறையன்பு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில், தென்மேற்குப் பருவமழை பாதிப்புகளை உடனுக்குடன் சீர் செய்வது, வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளை விரைவுபடுத்துமாறு முதலமைச்சர் அறிவுறுத்தல்களை வழங்கினார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply