17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 13 ஆண்டு சிறைத் தண்டனை!

திண்டுக்கல் அருகே 17 வயது சிறுமிக்கு திருமண ஆசை காட்டி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 13 வருடம் சிறை தண்டனை வழங்கி திண்டுக்கல் மகிளா விரைவு நீதிமன்றம் உத்தரவு.

திண்டுக்கல் மாவட்டம், அஞ்சுகுளிபட்டியை சேர்ந்த ராஜூ என்பவரது மகன் ஆண்டிச்சாமி (24). இவர் கடந்த 2018-ல் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார்.

இதனையடுத்து அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கடந்த 10.12.2018 அன்று திருப்பூருக்கு கடத்தி சென்றுள்ளார்.

சிறுமியை காணாமல் அவரது தாயார் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர்.

இந்நிலையில் திருப்பூரிலிருந்த ஆண்டிச்சாமியை போக்சோ சட்டத்தில் கீழ் போலிசார் கைது செய்து சிறுமியை அங்கிருந்து மீட்டனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அஞ்சுகுளிபட்டியை சேர்ந்த வீரப்பன் வயது 48, பொன்னுச்சாமி வயது 54, வீரன் வயது 52. ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார், இன்று 24.06.2022 பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்

அதில் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதற்காக ஆண்டிச்சாமிக்கு 13 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.3000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இதனையடுத்து குற்றவாளி ஆண்டிச்சாமி மதுரை மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

டி.எஸ்.ஆர்
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply