அரசின் நலத்திட்ட உதவிகளை மக்களிடையே கொண்டு செல்வதில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துமாறு செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அரசின் நலத்திட்ட உதவிகளை மக்களிடையே கொண்டு செல்வதில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துமாறு செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.நேற்று சென்னையில் மக்கள் தொடர்பு துறையின் மண்டல பணி ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார்.

சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிலைகள், நினைவகங்கள், அரங்கங்கள் மற்றும் நினைவுத் தூண்கள் முறையாக பராமரிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். 

எஸ்.திவ்யா

Leave a Reply