2 ஆண்டுகளுக்கு பின் ஈரோடு- திருச்சி இடையே பயணிகள் ரயில் சேவை மீண்டும் துவக்கம்.

கொரோனாவால் 2 ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈரோடு – திருச்சி பயணிகள் ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கப்படவுள்ளது.

ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு தினசரி பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது.ஈரோட்டில் இருந்து காலை 8.10 மணிக்கு கிளம்பும் ரயில் 12 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் சென்றடையும். இதேபோல் மாலை 4.35 மணிக்கு ஈரோட்டில் இருந்துகிளம்பும் ரயில் இரவு 8.45 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் சென்றடையும்.

இதேபோல, திருச்சியில் இருந்து காலை 6.50 மணிக்கு கிளம்பும் ரயில் 11.10மணிக்கு ஈரோடு ரயில் நிலையம் வந்தடையும். இதேபோல் மாலை 4.35 மணிக்குதிருச்சியில் இருந்து கிளம்பும் ரயில் 8.25 மணிக்கு ஈரோடு ரயில் நிலையம்வந்தடையும். இவ்வறாக நாள் ஒன்றுக்கு இரண்டு முறை ரயில் இயக்கப்பட்டு வந்தது.இதில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வந்தனர்.

எஸ்.திவ்யா

Leave a Reply