ஆகம விதிகளின் படியே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் எந்தெந்த கோயில்கள் ஆகம விதிகளை பின்பற்றுகின்றன என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், ஆகம விதிப்படி அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அர்ச்சகர் நியமன விதிகளை எதிர்த்து மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், டில்லியை சேர்ந்தவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று (ஜூலை 15) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‛தமிழகத்தில் எந்தெந்த கோயில்கள் ஆகம விதிகளை பின்பற்றுகின்றன?’ எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும், ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களை அடையாளம் காண ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு மாதத்தில் குழு அமைக்க வேண்டும் என்றும், அவ்வாறான கோயில்கள் பட்டியலை பொது வெளியில் வெளியிட வேண்டும் எனவும், கோயில் அர்ச்சகர்கள் ஆகம விதிப்படி நியமிக்கப்பட வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எஸ்.திவ்யா

Leave a Reply