தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.
நடப்பு கல்வியாண்டில் ஆறு லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

சி.கார்த்திகேயன்

Leave a Reply