பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் மகளிருக்கான 71 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பளுதூக்கும் வீராங்கனை ஹர்ஜிந்தர் கௌருக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“காமன்வெல்த் போட்டிகளில் நமது பளுதூக்கும் வீரர்கள் குழு மிகச் சிறப்பாக செயலாற்றியுள்ளது. அந்த வரிசையில், ஹர்ஜிந்தர் கௌர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இத்தகைய சிறப்பான சாதனையைப் புரிந்த அவருக்கு வாழ்த்துகள். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்.”
எம்.பிரபாகரன்