காவிரியில் நீர்வரத்து அதிகரித்து வருவதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை.

திருச்சி கரூர் உள்ளிட்ட 14 டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் திரு. மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். மாநில அமைச்சர்கள் துரைமுருகன், கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் திரு. இறையன்பு உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 

எஸ்.திவ்யா

Leave a Reply