காவிரியில் வெள்ளப்பெருக்கு!- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்,நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால், மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்து.

காவிரியில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கொம்பு மேலணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடம் கரையோர மக்களுக்கும்  வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்து. ஆனாலும், காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள அபாயத்தை உடனே தடுப்பதற்கும், மேலும், வீணாக விரையமாகி வரும் தண்ணீரை பயனுள்ள வகையில் உபயோகப்படுத்துவதற்கும் ஒரே வழி, பிரதான பாசன கால்வாய் மற்றும் வாய்க்கால்கள் அனைத்திலும் தாமதமில்லாமல் உடனே உபரிநீரை திறந்து விட உத்தரவிட வேண்டும். இதனால் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிப்பதோடு, காவிரி பாசனத்தை நம்பியிருக்கும் விளைநிலங்கள் அனைத்தும் உரிய காலத்தில் நெல் பயிரிட ஏதுவாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

படங்கள்- சுவாமிநாதன், துரை திரவியம், சி.கார்த்திகேயன்

Leave a Reply