44வது செஸ் ஒலிம்பியாட்டில் 7வது சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

44வது செஸ் ஒலிம்பியாட் 7வது சுற்று ஆட்டங்கள் இன்று நடைபெறுகின்றன.நேற்று ஓய்வு நாள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஒலிம்பியாட்டில் பங்கேற்றுள்ள வீரர்கள், மாமல்லபுரம், சென்னை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு சுற்றுலா மேற்கொண்டனர்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்துள்ள கலைஞர்களுடன், அவர்களும் இணைந்து கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.அரசு பள்ளிகளில் பயின்ற மாணவ மாணவிகளுடனும் அவர்கள் செஸ் விளையாடி மகிழ்ந்தனர்.

இந்திய மகளிர் சதுரங்க அணி, இதுவரை 6 புள்ளிகள் பெற்றுள்ளது.ஓப்பன் பிரிவில் விளையாடும் வீரர்களின் இன்றைய ஆட்டம், குறிப்பிடத்தக்க வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதுவரை இந்தியா 10 நாடுகளுடன் 3வது இடத்தில் உள்ளது.

எம்.பிரபாகரன்

Leave a Reply