கோயில் காணிக்கை நகைகள் தங்கக் கட்டிகளாக மாற்றி முதலீடு: பத்திரத்தை கோயில் நிர்வாகியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்படைத்தார்.

முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் இன்று (11.8.2022) தலைமைச் செயலகத்தில், திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்களால் உண்டியல் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட திருக்கோயிலுக்குத் தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, பலமாற்றுப் பொன் இனங்களை மும்பை ஒன்றிய அரசின் உருக்காலையில் உருக்கி தூய தங்கக்கட்டிகளாக முதலீடு செய்யப்பட்டதற்கான தங்க முதலீட்டு பத்திரத்தினை, அத்திருக்கோயில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

எஸ்.திவ்யா

Leave a Reply