சென்னை துறைமுகத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் கூறியுள்ளார்.

சென்னை துறைமுகத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் கூறியுள்ளார்

சென்னை துறைமுகத்தில் நேற்று உயரதிகாரிகளுடன் ஆய்வு செய்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை துறைமுகம் மட்டுமல்லாமல், பாரதீப், விசாகப்பட்டிணம் ஆகிய துறைமுகங்களிலும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

சீன ஆராய்ச்சிக் கப்பல், அம்பன்தோட்டா துறைமுகத்தில் நின்று செல்வதற்கு இலங்கை அனுமதி அளித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாக அமைச்சர் கூறினார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply