22ஆவது காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ. 3.80 கோடிக்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற 22ஆவது காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்ற மேசைப்பந்து வீரர்கள் ஏ.சரத்கமல் மற்றும் ஜி.சத்தியன், ஸ்குவாஷ் வீரர்கள் சவ்ரவ் கோஷல் மற்றும் தீபிகா பல்லிக்கல், லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற செல்வி பவானி தேவி மற்றும் இந்தியாவின் 75ஆவது கிராண்ட் மாஸ்டராக பட்டம் வென்றுள்ள செல்வன் பிரணவ் வெங்கடேஷ் ஆகியோருக்கு உயரிய ஊக்கத்தொகையாக மொத்தம் ரூ. 3.80 கோடிக்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply