நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு.

நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு கூறியுள்ளார்.காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தமது துறையின்கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து இன்று காஞ்சிபுரத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

நமக்கு நாமே திட்டத்திற்காக 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
திட்டங்களின் தேவைகள் குறித்து உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் தெரிவித்தால் அதற்கு விரைவில் ஒப்புதல் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
வேலூரில் மேற்கொள்ளப்பட்ட நவீன நகர திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகார் பெறப்பட்டதையடுத்து, அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கே என் நேரு கூறினார்.

எஸ்.திவ்யா

Leave a Reply