தமிழக சிறைத்துறையை முன்மாதிரி சிறைத்துறையாக உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது! -சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.

தமிழக சிறைத்துறையை முன்மாதிரி சிறைத்துறையாக உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.திருச்சியில் சிறைக்காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசினார்.சிறைக்காவலர்கள் அனைவரும் சிறைவாசிகளை சீர்திருத்த உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். சிறைத்துறையின் தூண்கள் என்பதை உணர்ந்து, சிறைக்காவலர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் ரகுபதி கூறினார்.

திவாஹர்

Leave a Reply