தொய்வின்றி மக்கள் தேவைகளை நிறைவேற்றுவோம் என கள ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.

தொய்வின்றி மக்கள் தேவைகளை நிறைவேற்றுவோம் என கள ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மக்களின் குறைகளை தீர்ப்பதை மாவட்ட ஆட்சியரும், அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும் எனவும் மனுக்கள் வெறும் காகிதங்கள் அல்ல, ஒருவரின் வாழ்வு, எதிர்காலம் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

`கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ், சேலம் உள்பட 4 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தின் கீழ், மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply